தமிழ் சினிமாவில் பல திறமைமிக்க நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் நடிகர் தனுஷ். அண்மையில் “இட்லி கடை” படத்தின் வேலைகளை முடித்துவிட்டு, தற்போது பாலிவுட் பக்கம் விரைந்துள்ள தனுஷ், “தேரே இஸ்க் மெயின்” என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகின்றார்.
இந்தத் திரைப்படம், ஒரு வித்தியாசமான காதல் கதை எனவும், மிகுந்த உணர்ச்சி பூர்வமான கதையமைப்பை கொண்ட படம் எனவும் கூறப்படுகின்றது. இதில் தனுஷின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருக்கும் எனவும் சிலர் கருதுகின்றனர்.
தற்போது அவர் நடித்து வரும் “தேரே இஸ்க் மெயின்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து ஒரு முன்னணி பாலிவுட் நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படம் உணர்வு பூர்வமான சமூகக் கருத்து கலந்த திரைப்படமாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
“தேரே இஸ்க் மெயின்” படப்பிடிப்பின் முக்கிய கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தனுஷ் தற்போது தனது அடுத்த தமிழ்ப்படமான “அறுவடை” பக்கம் கவனம் செலுத்தவுள்ளார். இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா உருவாக்க இருக்கின்றார். இப்படத்தில் தனுஷ் ஒரு விளைச்சல் தொழிலாளி அல்லது விவசாயி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
‘அறுவடை’ படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தாமதம் அடைந்துள்ளன. இதனால் படக்குழு, ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க தீர்மானித்துள்ளது. ‘அறுவடை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சிறிய காலத்திற்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படவில்லை. படக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, தொடர்ந்து 3 மாதங்களுக்கு படப்பிடிப்பு இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!