• May 17 2024

கணவன் தன்னை அழைத்துச் செல்வான் என்று காத்திருக்கும் அபி- வெற்றி எடுக்கப் போகும் முடிவு என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கு மட்டுமல்லாது சீரியல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அத்தோடு ரி ஆர் பியிலும் இந்த சீரியல்கள் முன்னணியில் காணப்படுகின்றன.

அந்த வகையில் இதில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌனராகம் ,ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும் போன்ற சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதில் தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இதில் கதாநாயகனாக வினோத்பாபுவும் கதாநாயகியாக பவித்ராவும் நடித்து வருகின்றனர்.

எதிர்பாராத விதமாக திருமணத்தில் இணைந்த இவர்கள் தற்பொழுது பிரிந்து விட்டனர். அத்தோடு இருவருக்கும் வெவ்வேறு திருமண ஏற்பாடும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வெற்றி வந்து தன்னை அழைத்துச் செல்வான் என அபி காத்திருக்கின்றார்.

மேலும் ராதாவின் அப்பா வெற்றியின் காலில் விழுந்து தன்னுடைய பெண்ணை திருமணம் செய்யும் படி கூறுகின்றார். இதனால் வெற்றி என்ன செய்யப்போகின்றான் என்று தெரியவில்லை. இது குறித்த அடுத்த வார புரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement