• May 10 2024

படப்பிடிப்புக்கு வரச்சொல்லி அப்படி கூறி அசிங்கப்படுத்திய வடிவேலு-பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து நடிகர் வடிவேலு தன்னை அசிங்கப்படுத்தினார் என பிரபல நகைச்சுவை நடிகர் கூறியிருக்கும் விசயம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு.இவர்  மற்றவர்களை காயப்படுத்தாமல் தன்னைத்தானே டேமேஜ் செய்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பார் நடிகர் வடிவேலு. இதனாலேயே வடிவேலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றுவரை  கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான 24 ஆம் புலிகேசி படத்தில் நடித்தார் வடிவேலு. அப்போது ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தயாரப்பாளருக்கு பல கோ ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.



இதனால் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. இவ்வாறுஇருக்கையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிவேலு மீதான தடைநீக்கப்பட்டது. இதையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்தார். நேற்று முன் தினம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  பிரபல நகைச்சுவை நடிகரும் தேமுதிக கட்சியின் பிரமுகருமான மீசை ராஜேந்திரநாத், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிகர் வடிவேலு குறித்து பகீர் தகவலை தெரிவித்துள்ளார் மீசை ராஜேந்திரநாத். அதாவது ஒரு நாள் வடிவேலு தன்னை பார்க்க வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து வடிவேலுவை சந்தித்துள்ளார் மீசை ராஜேந்திரன். அப்போது போனில் நம்ம மீசை ராஜேந்திரனை போட்டு விடலாம், சாமி படத்தில் நடித்திருக்கிறார். நாளை அவரை வர சொல்கிறேன் என்று கூறி போனை வைத்துள்ளார் வடிவேலு



இதன் பின்னர் மீசை ராஜேந்திரனிடம் நாளை காலை 7 மணிக்கு டிஆர் கார்டன் வந்துடுங்க என்று கூறி அனுப்பி வைத்தாராம். இதையடுத்து அடுத்த நாள் காலை 7 மணிக்கு மீசை ராஜேந்திரனும் அங்கு சென்றுள்ளார். அப்போது சிங்கமுத்து மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். அப்போது டீக்கடையில் நடைபெறும் ஒரு காட்சியில் வடிவேலுவும் பெசண்ட் ரவியும் நடித்துக் கொண்டிருந்தார்களாம்.

அப்போது வடிவேலுவுடன் இருப்பவர்கள் மீசை ராஜேந்திரனிடம் எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது நேற்று வடிவேலுதான் வரச்சொன்னார் என்ற கூறியிருக்கிறார் மீசை ராஜேந்திரன். அதற்கு நீங்கள் நடிக்க வேண்டிய காட்சியைதான் பெசண்ட் ரவியை வைத்து எடுக்கிறார்கள் என்று  தெரிவித்துள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பை முடித்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த வடிவேலுவிடம், நேற்று வர சொன்னீர்களே என்று கேட்டுள்ளார்



அதற்கு வடிவேலு, நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு… உங்களுக்கெல்லாம் சான்ஸ் இல்லை என்று முகத்தில் அடித்தது போல் பேசினாராம். இதனால் கடும் கோபம் வந்ததாம் மீசை ராஜேந்திரநாத்திற்கு. ஆனால் சினிமாவில் அவர் பெரிய ஆள் என்பதால் நீங்களே என்னை அழைத்து வாய்ப்பு இருக்கு வாங்க என்று கூறிவிட்டு இப்போது இப்படி செய்யலாமா? இனிமே யாருக்கும் இப்படி பண்ணாதீங்கண்ணே என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாராம் மீசை ராஜேந்திரநாத்.

சிவனேன்னு இருந்த தன்னை அழைத்து வாய்ப்பு இருக்கு வாங்க என கூறி அசிங்கப்படுத்திவிட்டார் என ஆதங்கப்பட்டுள்ளார் நடிகர் மீசை ராஜேந்திரநாத். அத்தோடு ஏற்கனவே நடிகை பிரேமா பிரியா வடிவேலுதான் தனது வாய்ப்பை எல்லாம் கெடுத்தது. அவரால்தான் இன்று சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் அநாதையாக நிற்கிறேன் என கண்ணீர் மல்க கூறியிருந்தார். இந்நிலையில் மீசை ராஜேந்திநாத் வடிவேலு குறித்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement