• May 17 2024

தேர்தல் விஷயத்தில் பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.- மோசமாக அசிங்கப்படுத்திய ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவைத் தேர்தலில் நிற்க சொல்ல ராதிகா என்னால முடியாது நீங்க நினைக்கிறதெல்லாம் நான் ஆள் கிடையாது என கூறுகிறார்.

அடுத்து கோபி ராதிகாவை ஒரு வழியாக சமாதானம் செய்து தேர்தலில் நிற்க சம்மதிக்க வைக்கிறார். அடுத்து மீண்டும் கூட்டம் கூட அதில் அந்த ஏரியா செக்ரட்டரி என் மனைவி தேர்தல்ல நிக்கல என சொல்ல செல்வி அப்போ எங்க அக்கா போட்டி இல்லாமல் ஜெயிச்சுட்டாங்களா? என சொல்ல இல்ல வேற ஒருத்தர் நிக்கிறாங்க என கூறுகிறார்.


அடுத்ததாக கோபி ராதிகாவுடன் ஏற்றி கொடுத்து ராதிகா இந்த தேர்தலில் நிற்க போவதாக சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அடுத்து இருவரையும் பார்ம் பில் பண்ண கூப்பிட பாக்யா வந்து பார்மை பில் பண்ணும் போது கணவரின் பெயரை குறிப்பிடாமல் இருக்க அந்த செக்கரட்ரி உங்க கணவரோட பெயர் எழுதுங்க என சொல்கிறார். பிறகு பாக்கியம் தந்தை என சொல்லி தனது மாமனார் பெயரை எழுதுகிறார்.

பிறகு ராதிகா மற்றும் பாக்கியா என இருவரும் தங்களுக்காக ஓட்டுக்களை சேகரிக்கின்றனர். ராதிகா சும்மா சமையல செஞ்சி வீட்ல துணி துவைச்சு  போட்டுட்டா ஒருத்தரால ஏரியாவை கவனித்துக் கொள்ள முடியாது அதுக்காக படிப்பறிவு அனுபவம் தேவை என சொல்லி ஓட்டு கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement