• May 17 2024

“இதனால்தான் திருமணம் செய்துகொண்டேன்”… மகேஷ் பாபு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் மகேஷ் பாபு .இவர் கடைசியாக நடித்த படம் சரிலெரு நீகேவ்வாரு. 2020 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படம் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்காரு வாரி பாட்டாபடத்தில் கமிட்டானார் மகேஷ்பாபு. கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் மகேஷ்பாபுவின் முந்தைய படத்தின் வெற்றி இயக்குநரின் முந்தைய படத்தின் வெற்றி இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.இப்படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது.சர்காரு வாரி பாட்டாபடத்தின் பஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிக் கொண்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் ட்ரெய்லரும் அதே போல மிகப் பெரிய ரீச் ஆகியுள்ளது. மேலும் இந்த படம் கடந்த ஆண்டிலேயே முடிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டது படக்குழு. இந்த படத்தை மகேஷ் பாபுவுடன் இணைந்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 18 Reels Plus entertainment தயாரித்துள்ளனர்.

சர்காரு வாரி பாட்டா திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக பதில் அளித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு.மேலும் எந்த ஒரு கேள்விக்கும் யோசிக்காமல் படார் படார் என பதில் கொடுத்துள்ளர் மகேஷ் பாபு. சர்காரு வாரி பாட்டாபடத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்ன என்ற கேள்விக்கு " இந்த படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம், அதை உருவாக்கிய விதம் தான் மறக்க முடியாத நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்ற கேள்விக்கு " Professor " என பதில் தந்துள்ளார்.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மகேஷ்பாபு அவர் குடும்பத்தைப் பற்றிய சில கேள்விகளுக்கும் பதில் தந்துள்ளார் சர்காரு வாரி பாட்டா படத்தின் " Penny " பாடலில் ஆடிய அவரது மகளை குறிப்பிட்டு எப்போது அவர் சினிமாவில் நடிக்க வருவார் என கேட்க அதற்கு சற்றும் யோசிக்காமல் " அவர் ஏற்கனவே நடிகை தான்" என பதில் தந்தார்.

அதைத்தொடர்ந்து உங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது என்ற கேள்விக்கு, " அவரின் அனைத்து குணங்களும் பிடிக்கும். அதனால்தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என சொல்லியபடியே புன் சிரிப்பை உதிர்த்தார் மகேஷ் பாபு. அத்தோடு உங்கள் நெருங்கிய நண்பர் யார் என்ற கேள்விக்கும் " அதுவும் எனது மனைவியே என பதில் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/embed/1wa4TmDc_70


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement