• Apr 27 2024

தனுஷ் லைப்க்கு விடை கொடுத்த ஐஸ்வர்யா? விரைவில் அது நடக்கும்...! அடித்துச் சொன்ன பிரபலம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

சிறப்பாக சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா, தனுஷ் திருமண வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட பூகம்பத்தினால் இருவரும் பிரிந்து வாழ்கின்றார்கள். எனினும் அவர்கள் இதுவரையில் விவாகரத்து பெறவில்லை.

3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான  ஐஸ்வர்யாவுக்கு, அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும், அந்த படம் பலரையும் கவர்ந்திருந்தது. தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயற்றியிருந்தார். எனினும் அது தோல்வி அடைந்தது.


இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தை கெஸ்ட் ரோலிலும், விஷ்ணு விஷால், விக்ராந்தை லீடு ரோலிலும் வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா. லால் சலாம் படமானது வெளியாகி, சுமாரான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு, விவாகரத்து பற்றி பயில்வான் ரங்கநாதன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், ஆந்திராவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இருந்த போது தான் அவர்களுக்கு விவாகரத்து விஷயம் நடந்தது. 


அதாவது அங்கிருந்தபடி தான் ரெண்டு பேருமே தங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். அது ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவர்களை சேர்த்து வைக்க இன்றுவரை முயன்று வருகிறார்கள். அதேபோல தன்னுடைய மகன்களான யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு பேருக்காகவும்  தனுசுடன் மீண்டும் இணைவதற்கு ஐஸ்வர்யா முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லி உள்ளார். ஆகவே விரைவில் அவர்கள் இரண்டு பேரும் இணைவார்கள் என்று பயில்வான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement