• Apr 26 2025

மூன்று பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படும் வழக்கு..!"காதல்" பட நடிகரால் ஏமாற்றப்பட்ட பெண்..!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  ‘காதல்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் சுகுமார், தற்போது ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்ட சுகுமார் பற்றிய கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

இது சுகுமாருடைய திருமண வாழ்க்கை குறித்த சர்ச்சை மட்டுமல்ல, இது சட்டத்திற்கு எதிரான மோசடி, நம்பிக்கை துரோகம் மற்றும் பெண் புறக்கணிப்பு போன்ற பல்வேறு வழிகாட்டல்களில் உள்ள வழக்காக மாறியுள்ளது. சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


திரையுலகில், புதுமையாக காட்சியளித்த ‘காதல்’ திரைப்படம் மூலம் பெரும் கவனம் பெற்ற சுகுமார், அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும், அந்தளவிலான வெற்றியை பெறவில்லை. அத்தகைய சுகுமாருக்கு ஓரளவுக்கு தொலைக்காட்சி, விளம்பரத் துறைகளில் இருந்தும் வாய்ப்புகள் கிடைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்,அவரது பெயரை சம்பந்தப்படுத்தி ஒரு துணை நடிகை அளித்த புகார் தமிழ்த் திரையுலகத்தையே அதிரவைத்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது மூன்று முக்கியமான சட்ட பிரிவுகளின் கீழ் சுகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்த சம்பவத்தால் தற்போது சுகுமாரை விசாரணைக்கு வரவழைக்க  காவல் துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர் தற்போது சென்னையில் உள்ளாரா அல்லது வெளியூர் சென்றுவிட்டாரா என்பதைக் காவல் துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், சில முன்னணி நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், பெண் நடிகைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதுபோல தங்களை ஏமாற்றியுள்ள ஆண்களைப் பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களுக்கு வரவேற்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும் எனவும் சிலர் கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.



Advertisement

Advertisement