தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குநரான மணிரத்தினம் மற்றும் இந்திய திரையுலகின் சிறந்த நடிகரான கமல் ஹாசனும், மீண்டும் ஒரே படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1987ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் வரலாற்றில் மறக்க முடியாத படம். இந்த மாபெரும் வெற்றிக்குப் பின், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார்கள் என்பது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல் ஹாசனின் 233வது திரைப்படம் தான் இந்தப் புதிய கூட்டணியில் உருவாகவுள்ள படம் எனக் கூறப்பட்டுள்ளது.இப்படத்தை மணிரத்தினம் இயக்கவுள்ளார் என்பது இப்பொழுது உறுதியாகியுள்ளது. மணிரத்தினம் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு மூலம், “உலக நாயகனுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது பங்களிப்பு ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்பை உயர்த்தும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்தினம் – கமல் ஹாசன் கூட்டணியில் உருவான 'நாயகன்' படம் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த படம் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்பட்டிருந்தது. அந்தவகையில்,மணிரத்தினம் இந்த புதிய படம் குறித்துக் கூறும் போது, "கமல் ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்தப் படத்தில் இயக்குநருக்கு பாதி வேலை முடிந்து விட்டது என்றே கருதவேண்டும்." எனத் தெரிவித்திருந்தார்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல் - மணிரத்தினம் இணைவதென்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. கலைமாமணிகள் இருவரும் சேரும் இந்தத் திரைப்படம், திரை உலகில் புதிய வரலாற்றை எழுதப்போகிறது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Listen News!