தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை த்ரிஷா மற்றும் நடிகராக இருந்து தற்போது அரசியலில் உயர்ந்த பதவியில் இருக்கும் விஜய் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
நேற்று விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் நடிகை திரிஷா நேரடியாக எந்த வாழ்த்தும் பகிரவில்லை என்பது ரசிகர்களிடையே பல்வேறு கருத்துக்களை உருவாக்கியது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்ததால், இந்த முறை ஏற்பட்ட மௌனம் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா தற்பொழுது பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் நள்ளிரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இரு தரப்பாகப் பிரிந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில காலமாகவே பல்வேறு வதந்திகளும், ஊகங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், இந்த புதிய புகைப்பட விவகாரமும் அதற்கு மேலும் தீப்பொறி சேர்த்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து விஜய் அல்லது திரிஷா தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
Listen News!