• Aug 16 2025

விமான நிலைய ஊழியரால் கோபமடைந்த பிரியங்கா சோப்ரா.! நடந்தது என்ன.?

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். 


சமீபத்தில் பிரியங்கா சோப்ரா, தனது மகளுடன் விமான நிலையத்தில் செல்லும் போது அங்கு நின்ற ஊழியர் ஒருவர், Bag ஆல் குழந்தையை இடித்தார். இதனைப் பார்த்த பிரியங்கா உடனே தனது மகளின் தலையை கைகளால் தேய்த்து விட்டார். 


பின் பிரியங்கா சோப்ரா திரும்பிப் பார்த்தவுடனே, அந்த ஊழியர் தனது தவறை உணர்ந்து, “Sorry” என்று கூறியுள்ளார். பிரியங்கா அந்த கணநேரத்தில் ஒரு நட்சத்திரமாக இல்லாது, ஒரு அம்மாவாக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement