• Apr 27 2025

படையப்பா ஸ்டைலுக்கு மாறிய எதிர்நீச்சல் சீரியல் பெண்கள்! இனியாவது சாதிப்பார்களா? சாவடிப்பார்களா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது எதிர்பாராத திருப்பத்துடன் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

குறித்த ப்ரோமோவில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் பெண்கள் தங்கள் கனவை நோக்கி புறப்பட்டது போல தெரிகிறது. 

அதில், எங்க தொடங்கினோம் இப்போ எங்க வந்து நிக்கிறோம், ரூட் மாறிட்டமா என நந்தினி கேட்க, ரூட்ட மாறிட்டோமா இல்ல தொலைச்சிட்டோமா என தெரியலையே என ரேணுகா சொல்லுகிறார்.

அதற்கு ஈஸ்வரி, நாம எதையுமே தொலைக் இல்ல, எதையுமே இழக்க இல்ல. கண்டிப்பா நாம கண்ட கனவுல வெற்றி அடைவோம் என அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.


இதை தொடர்ந்து ஜனனியும், நாம ஆழமா சிந்திச்சு ஒரு விசயத்துல இறங்கினோம் என்றா கண்டிப்பா வெற்றி பெறுவோம் என சொல்லுகிறார்.

எனவே தற்போது வெளியான ப்ரோமோ பலருக்கு இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த போதிலும், இன்னும் சில ரசிகர்களுக்கு சலிப்படைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement