தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி " எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் ஒரு பகுதியை பார்வையிட்டு மிகவும் சூப்பராக வந்திருப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர் 2 " படத்தில் நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு வேலைகள் மைசூரில் இடம்பெறவுள்ளது.
இந்த இரண்டு படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்ததும் 6 மாதங்கள் தற்காலிக ஒய்வு எடுக்க உள்ளதாகவும் அந்த காலப்பகுதிக்குள் தனது சுயசரிதையினை எழுத இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. வேட்டையன் திரைப்படம் ஓரளவு வரவேற்பு கிடைத்த நிலையில் "கூலி " படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் சூட்டிங் முடிந்து இருக்கும் ரஜினிக்கு ரசிகர்கள் போட்டோ எடுப்பதற்கு நெருக்கடி கொடுப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது வரை அவரது அசிஸ்டன்ட் நூறிற்கும் மேற்பட்ட பெயரை வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ரஜினி சற்று சிக்கலை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!