• Apr 17 2026

சிவாஜி கணேசனின் 'அன்னை இல்லம்' விவகாரத்தில் உயர் நீதிமன்றம் திடீர் முடிவு..!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன் எப்பொழுதும் மக்கள் மனங்களில் ஒளிரும் சிறப்பான நடிகர். அவரது நடிப்பு தொடர்ந்து பல தலைமுறைகளாக சினிமா உலகிலும், வணிகத் துறைகளிலும் பரவி வருகின்றது. 

சிவாஜி கணேசனின் பேரனும், பிரபல நடிகருமான ராம் குமாரின் மகன் துஷ்யந்த், சமீபத்தில் பட தயாரிப்பு துறையில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். அவர் மற்றும் அவரது மனைவி அபிராமி இணைந்து, ‘ஈசன் புரொடக்சன்’ என்ற பெயரில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார்கள்.


அந்த நிறுவனம், விஷ்ணு விஷால் மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை அண்மையில் தயாரித்தது. இந்நிறுவனம் மூலமாக துஷ்யந்த் தயாரிப்புத் துறையில் தன் அடிச்சுவடுகளை வலுப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில், சிவாஜி கணேசனின் பழமை வாய்ந்த வீடான 'அன்னை இல்லம்' தொடர்பாக சில உரிமை விவகாரங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், துஷ்யந்த் தரப்பிலிருந்து, "அன்னை இல்லம் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை" என்பதற்கான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ராம் குமாருக்கு உத்தரவிட்டுள்ளது. ஜப்தி உத்தரவை நீக்க கோரிய நடிகர் பிரபு மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement