• Jul 31 2025

செக் மோடி வழக்கு பிரபல தயாரிப்பாளர் கைது....! அதிர்ச்சியில் ரசிகர்கள் ....!

Roshika / 21 hours ago

Advertisement

Listen News!

சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஸ்ரீகரீன் புரொடெக்ஷன்ஸ் உரிமையாளர் சரவணன் செக் மோடி வழக்கில் கைது செய்யப்பட்டார். பூவிருந்தவல்லியை சேர்ந்த கண்ணப்பன் என்பவரிடம் 2017-ஆம் ஆண்டு சரவணன் ரூ.1.3 கோடி நிதியை கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததுடன், அந்த நிதிக்காக வழங்கப்பட்ட காசோலை பணமின்றி திரும்பியதால் கண்ணப்பன், சரவணனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.


செக் மோடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, பொலிஸார் சரவணனை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் பல படங்களை தயாரித்து வந்தவர். அவரிடம் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக இது முதலாவது முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம் திரையுலகத்திலும், நிதி தொடர்பான ஒழுங்குகள் குறித்தும் புதிய கேள்விகளை எழுப்பி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிதி தொடர்பாக கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இன்னும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement