• Jun 28 2025

" ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா"தடைசெய்யப்பட்ட காரணம்?CBFC பதில் அளிக்க நீதி மன்றம் உத்தரவு!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா தற்போது பல்வேறு சமூக, அரசியல், நீதிமுறை விவாதங்களை முன்வைத்து உருவாகும் படங்களால் சிறப்பாகும். "ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா"என்ற இந்த படத்தில் மத்திய அமைச்சரும், புகழ்பெற்ற நடிகருமான சுரேஷ் கோபி மற்றும் இளமையிலும் திறமையிலும் முன்னிலை வகிக்கும் அனுபமா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படம்,  ஜூன் 27வெளிவதற்குள் CBFC யின் முடிவால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தடையை நீக்குவதற்கு நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஜூன் 27, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) இதற்கு “அதிக அரசியல் நுணுக்கம் மற்றும் சமூக அமைப்புகளை கேள்விக்குள்ளாக்கும் விளக்கங்கள்”  என்ற காரணங்களை முன்வைத்து படம் வெளியீட்டை தற்காலிகமாக தடை செய்துள்ளது. படம் எந்தவொரு தனிநபரையோ அரசியல் கட்சியையோ குறி வைக்கவில்லை என படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளர்களும் வலியுறுத்தியிருந்தாலும், படத்தில் வரும் சில நீதி அமைப்புகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற காட்சிகள், அரசியல் மற்றும் சட்ட அமைப்புகளின் நம்பிக்கையை பாதிக்கும் என CBFC தெரிவித்து முடிவெடுத்துள்ளதாக தகவல்.



மேலும் படத்தின் டிரெய்லர் மற்றும் ப்ரோமோஷன்கள் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவானது. அதிலும் குறிப்பாக, ஒரு பெண் இப்படி நேரடியாக அரசை எதிர்த்து நீதிக்காக போராடும் கதாபாத்திரமாக வருவது  வாடகை காட்டும் எளிய “அம்மா” கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டது. மலையாள சினிமாவுக்கே இது ஒரு புதிய மரபை உருவாக்கும் படமாகவே பார்க்கப்பட்டது. 


தற்போது, படத்தின் தயாரிப்பாளர்கள் CBFC-வின் முடிவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், படத்தில் வரும் காட்சிகள் யாவும் உண்மையான சம்பவங்களை மையமாகக் கொண்டது என்றும், அவை எந்த விதத்திலும் சட்ட அமைப்புகளை அவமதிக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளன ."ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா" என்பது வெறும் ஒரு திரைப்படமாக இல்லாமல், ஒரு சமூகக் குரல், சட்டத்தில் நம்பிக்கை, மனித உரிமைகளுக்கான ஓர் அழைப்பு என்று குறை முடியும் . மேலும் நீதி  மன்றம் பல கேள்விகளை முன் வைத்துள்ளது. இந்த நிலையில் சீதா ,ராம் என்ற பெயர்கள் இருக்கும் போது ஜானகி என்ற பெயருக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இதற்கு பதில் அளிப்பதற்கு CBFC உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

Advertisement

Advertisement