• Aug 10 2025

ஏன் வைரமுத்துவைப் பற்றிதான் கேட்கணும்?செய்தியாளர் கேள்வியில் கோபமான ஆன சின்மயி...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல பாடகி சின்மயி, சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய விருதுகள், தூய்மை பணியாளர்கள் பிரச்சனை மற்றும் பெண்கள் சுகாதாரம் குறித்து தைரியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசியுள்ளார். தேசிய விருதுகள் குறித்து, எழுத்தாளர் வைரமுத்து எழுப்பிய கருத்துகள் குறித்து கேட்கப்பட்ட போது, சின்மயி பதிலளிக்கும்போது கடுமையான எதிர்வினை காட்டினார். 


“ஏன் வைரமுத்துவைப் பற்றிதான் கேட்கணும்? ஏழு வருடங்களாக நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நீடிக்கிறது. அவர் மீது வரும் புகார்களை பற்றியோ, உர்வசி மேடத்தைப் பற்றியோ நீங்கள் பேச மாட்டீர்களா?” என்றார்.


அதே நேரத்தில், தூய்மை பணியாளர்கள் வேலை இழப்பு மற்றும் அவர்களின் நிலைமையைப் பற்றியும் பேசினார். “அந்த நாளில் அவர்கள் வேடிக்கையாய் இல்லை, உண்மையில் வேலை வேண்டி காத்திருந்தார்கள். அவர்கள் குடும்பத்திற்கான ஒரே ஆதாரமாக இருக்கிறார்கள். 


அந்த வேலையை கொடுக்கலாம், அது அவர்களுக்கான உரிமை,” என்றார்.  ஐஸ்வர்யா பிரஸ்ட் சென்டரின் தொடக்க விழாவில், பெண்களின் சுகாதார விழிப்புணர்வைப் பற்றி வலியுறுத்தினார். "ஏர்லி ஸ்கிரீனிங் முக்கியம். பெண்கள் தங்கள் உடல்நலத்தையும் முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். அறிவும், மருத்துவ மேம்பாடுகளும் நமக்கு துணையாக உள்ளன,” எனக் கூறினார்.


Advertisement

Advertisement