• May 11 2024

நான் ஏடிஎம் தானே அழகு இருந்தால் தானே வாய்ப்பு கிடைக்கும் - கோலி சோடா நடிகை சீதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கோலி சோடா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் சீதா. இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கோலி சோடா திரைப்படமே இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.


அதில் அவர் கூறியதாவது எங்க வீட்டில அப்பாவுக்கும் உடல் நிலை சரியில்லை.அம்மா வீட்டு வேலை செய்து தான் இன்றைக்கு வரைக்கும் எங்களை வளர்த்திட்டு வருகிறாங்க. நான் இப்போ பிஏ படிக்கிறேன்.அம்மா தான் எல்லாத்தையுமே பார்த்துக் கொள்ளுறாங்க, எனக்கு எங்க அம்மாவை பார்த்துக் கொள்ளனும் என்பது தான் என்னோட ஆசை.


கோலி சோடா படவாய்ப்பு எப்பிடி கிடைச்சிச்சு என்றால் நான் பிரண்ட் வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன். அப்போ கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் சேர் என்கிட்ட பெயர் போன் நம்பர் எல்லாம் கேட்டாரு. ஆனால் நான் சொல்லல மோசமாக திட்டிட்டேன். அதுக்கு பிறகு எங்க பிரண்ட் வீட்டிலையும் வந்து கேட்டாங்க அவங்களும் திட்டிட்டாங்க.


இப்பிறம் வீட்டை வந்து சொன்னாங்க நான் இயக்குநர் இப்படி படத்திற்கு அவங்க நடிக்க வரணும் என்று அம்மா ஓகே சொல்லிட்டாங்க, அம்மாட ஆசைக்காக தான் சினிமாவுக்கே வந்திருக்கிறேன். இப்போ அவருடன் தான் அடுத்த படத்தில் நடிச்சிட்டு வாரேன். ஆரம்பத்தில நான் படம் நடிக்கிறேன் என்று சொல்லும் போது யாருமே நம்பல உன்னோட மூஞ்சிக்கெல்லாம் படவாய்ப்பா என்று கேட்டாங்க, நடிக்கணும் என்றால் அழகு தானே வேணும் நான் ஏடிஎம் தானே, இன்னும் நிறைய படங்களில் நடிக்கணும் என்பது தான் என்னோட ஆசை என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement