• May 17 2024

நான் உயிரோட இருக்கக் காரணமே இதுதான்... என்னால மறக்க முடியாது... எமோஷனலான சம்யுக்தா..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் 'சிப்பிக்குள் முத்து' சீரியல் மூலம் பிரபலமானார்கள். சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது காதலை ரசிகர்களுக்கு அறிவித்த இவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். எட்டு மாதங்களாக காதலித்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 


எதிர்பாராத விதமாக சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் இன்ஸ்டாகிராமில் தங்களது திருமண புகைப்படங்களை டெலிட் செய்து ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்தனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்குவதை போல் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 


இந்நிலையில் தற்போது சம்யுக்தா மற்றுமோர் இன்ஸ்டா ஸ்டோரி பதிவை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் இன்றைக்கு மறக்க முடியாத நாள் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது "தொடக்க காலத்தில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது, இதுவரை நான் எங்க போனாலும் எல்லாருமே என் கூட இருந்து நிறைய அன்பு காட்டி வந்தீர்கள், நான் நடிச்ச கதாபாத்திரத்தை நான் ரொம்பவே ரசிக்கின்றேன்.


இப்ப வந்து தனிப்பட்ட விஷயத்தில் என்னைப் பற்றித் தெரிந்து கொண்டு என்மேல் அன்பு காட்டுறீங்க, எல்லாருமே என்னை உங்க சொந்த சகோதரியாக நினைக்கிறீங்க. உங்களின் விலை மதிப்பற்ற அன்பை எனக்கு கொடுக்கிறீங்க, ஒரு சில வாழ்க்கை விஷயங்களை சொன்னீங்க, உங்க எல்லாருக்குமே நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நான் இருக்கிறதற்கு தகுதியானவ என்பதை உணர வைத்த அந்த விஷயம் தான் நான் இப்ப உயிரோட இருக்கக் காரணம், எல்லாருக்குமே ரொம்ப நன்றி, நான் யார் என்பதற்காக, என்னை ஏற்றுக் கொண்டதற்காக, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்பவுமே நன்றியோடு இருப்பேன்" எனவும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா.


Advertisement

Advertisement