படத்தின் கலை, செய்திக் கட்டமைப்பை மீறி, தனி நபர் ருசிக்கே ஆதரவு தரும் ரிவியூயர்கள் குறித்து நடிகர் R.S கார்த்திக் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் விஜே பிரணேஷுடன் கலந்துரையாடிய இவர், தமிழ் சினிமா, ரிவியூ கலாசாரம், மற்றும் தனக்கு நேரில் நேர்ந்த அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
ரிவியூ என்பது விளம்பரமல்ல… மக்களுக்கான வழிகாட்டி ஒரு ஹோட்டல் எப்படி இருக்குன்னு நம்ம நண்பரிடம் கேட்பது போல் தான் உண்மையான ரிவியூ இருக்க வேண்டும் . அதை ஹோட்டல் விற்பனையாளரிடம் பணம் கேட்க கூடாது. அதேபோல், படம் எப்படி இருந்துச்சு என்பதை உண்மையாகவே பகிர்வதே விமர்சனம் என்கிறார் கார்த்திக். ஆனால் இன்று விமர்சனம் என்ற பெயரில் ஒரு சிலர் மட்டும் தான் ரியல் ரிவியூ சொல்லிகொண்டிருக்கிறார்கள் என்றும், பெரும்பாலானவர்கள் மன்னிப்பு, விருப்பம், விரோதம் அடிப்படையில் கருத்து கூறுகிறார்கள் என்றும் அவர் தன்னுடைய வேதனை தெரிவித்தார்.
மேலும் அரண்மனை 4 படம் நிறைய ரிவியூவர்ஸ் கழுவி ஊத்தினாங்க ஆனால் மக்கள் தான் அந்த படத்தை ஹிட்டாக்கினாங்க. இதுதான் உண்மை ரிவியூ” என்கிறார் கார்த்திக். அதேபோல் காந்தாரா, மலையாள திரைப்படங்கள், பஞ்சுமால் பாய்ஸ், தக் லைஃப் போன்ற படங்கள் எவ்வாறு உண்மையான பார்வையாளர்களால் மதிப்பிடப்படுகின்றன என்பதையும் எடுத்துக்கூறினார்.
ரிவியூவுக்கு காசு வாங்குறதுக்கு ஆதாரம் உண்டு! நடிகர் கார்த்திக் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் கூறியுள்ளார்.ப்ளூ சட்டை மாரனின் டீம் என் "பீச்சாங்கை" படத்துக்கு ரிவியூக்காக பணம் கேட்டது உண்மை. நான் கூறியது டிக்கெட் தரேன் திரைப்படத்தை பார்த்து விட்டு ரிவியூ பண்ண சொன்னேன் பணம் இல்லன்னு கூறியதாகவும். இது போன்ற சம்பவங்கள் தற்போது ரிவியூ துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாக அவர்கூறியுள்ளார்.
கார்த்திக் தனது போர் கொடி படத்தைப் பற்றி பரபரப்பான தகவல்களையும் பகிர்ந்தார். அதாவது ஆரம்பத்தில் கதை பிடித்தது என்பதாலேயே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் தயாரிப்பு குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகள், திட்டமிடல் தவறுகள், சம்பந்தமில்லாத நபர்கள் நடுவராக செயல்படுதல் போன்றவற்றால் படத்தின் நிறைவு மிகவும் கடினமானதாக இருந்ததாகவும் கூறினார்.நான் பணம் வாங்கல, ஆனா பொறுப்புடன் உழைத்தேன். தயாரிப்பாளருக்கு தரவேண்டிய படம் தரக்கூடிய வகையில் சிரமப்பட்டேன் என அவர் மனம் திறந்து கூறினார்.
ஒரு படம் எடுத்தவரிடம் பேசுறீங்க உங்க ரிவியூ கெட்டதா இருக்கா? இல்லா உங்க பக்கத்துக்காரன் படம் எடுத்தா நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா?” என்கிறார் கார்த்திக். அவர் குறிப்பிட்டார், விமர்சனம் என்பது ஒரு கட்டுமான விமர்சனமாக இருக்க வேண்டும். குறைகள் இருந்தால் கதை, நடிப்பு, தொழில்நுட்பம் என குறிப்பிட்டு பேச வேண்டும். ஆனால் தனிமனித தாக்குதலாக மாறிவிடும் பாணி தவறாகவே உள்ளது. இந்த விளம்பர ரிவியூ கலாசாரம், உண்மையான விமர்சனங்களை அடக்கி வருகிறது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவே கூடாது. அவர்கள் பேசிக்கிட்டு ஏமாற்றம் தருகிறார்கள். தொடர்ந்து, கமென்ட் களிலும் யாரையாவது திட்டுவது, நியாயமில்லாத விமர்சனம் செய்வது போன்ற விஷயங்களைக் கடுமையாக விமர்சித்தார்.
Listen News!