தமிழகத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தைக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுக்கப்படுவதாக கூறி, தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றம் பரிசீலனை செய்தது.
அதாவது, விஜய் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி த.வெ .க கட்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தது.
அதனடிப்படையில் இதனை விசாரித்த நீதிமன்றம் தற்பொழுது, " நிபந்தனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே.? தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு.?" என்று கேள்வியினை எழுப்பியுள்ளது. இந்த வழக்கு, அரசியல் வட்டாரங்களில் பரவலான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
Listen News!