• Jun 26 2025

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார்...!சோதனையில் சிக்கிய ஆதாரம்...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளத்தில் வைரைலாகி வரும் விடயமாக  நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியாக கூறி போலீசார் கைது செய்யப்பட்டு  இருந்தார். மேலும் அவர் நடிகர் ஸ்ரீகாந்த்  கூறிய இந்த குற்றச்சாட்டை  தன்னால் ஏற்று கொள்ள முடியாது என்று மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது அவரது வீட்டில்  சோதனை  நடைபெற்று வருகின்றதாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


இந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவிடம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவர் வாக்கும் மூலம் அளித்துள்ளார். அதில் நானும் நடிகர் ஸ்ரீகாந்தும் நல்ல நண்பர்கள் என்று கூறியதுடன் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளதாகவும் தனக்கு பல நோய்கள் இருப்பதனால்  போதைப்பொருள் பாவிக்க முடியாது என்று கூறியத்தில்  பொலிஸார் குழப்பம் அடைத்துள்ளானர் .  


தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில் தற்போது அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் அவரது இரண்டு வீட்டில் பல மணி நேராமாக சோதனை நடத்தி வருகின்ற பொலிஸார் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியதுடன் அவர் பயன்படுத்திய மருந்து பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன . மேலும்நடிகர் கிருஷ்ணாவையும் மருத்துவ பரிசோதனை செய்யவதற்கு அரச மருத்துவமனையில் அழைத்து செல்ல பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement