தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவிமோகன் அவரது நண்பி கெனிஷாவுடன் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு கைகோர்த்து வந்து விமர்சனத்திற்கு ஆளாகினர். மேலும் விவாகரத்து ஆக முன்னர் இவ்வாறு நடந்து கொண்டமையினால் பலராலும் எதிர்க்கப்பட்டார். மேலும் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை பலரையும் அனுதாபத்திற்கு ஆளாக்கியது.
இந்த நிலையில் தற்போது ரவிமோகனின் அம்மா ,அப்பா குடும்பத்தார் இவரை ஒதுக்கி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு கெனிஷாவுடன் அவருக்கு இந்த நெருக்கம் தான் காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் இவர் தற்போது ஜெயம் ஸ்டூடியோ எனும் புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தில் முதன் முதலில் ஜோகிபாபுவை ஹீரோவாக வைத்து தயாரிக்க தீர்மானித்துள்ளார். மேலும் இவர் ஐசரி கணேஷின் உதவியை நாடி இருப்பதாகவும் ஒரு சில பைனான்ஸ் கம்பெனிகளிடம் பணம் வேண்டி இந்த தயாரிப்பு நிறுவனத்தை நடாத்த தீர்மானித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!