இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை 2 திரைப்படத்தின் பின்னர் சூர்யா நடிப்பில் ஏற்கனவே முடிவு செய்த வாடிவாசல் திரைப்படத்தினை இயக்குவதாக கூறியிருந்தார். ஆனால் ஒரு சில பிரச்சனைகளினால் அது தள்ளிப்போயுள்ளது. இதனால் இயக்குநர் அடுத்து நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்கி வருகின்றார். promo காட்சியின் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்த நிலையில் நேற்று அமாவாசையை முன்னிட்டு promo வெளியிடுவதாக தகவல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒரு பகுதி இன்னும் படமாக்கப்படாமையின் காரணமாக வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் வடசென்னை 2 போன்று எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Listen News!