90s கால கட்டத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு அரவிந். இவர் தமிழில் பூவே உனக்காக, ஒன்ஸ்மோர் , வானத்தைப்போல எனப் பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
நேர்காணலில் தொகுப்பாளர் சில கேள்விகள் கேட்டிருந்தார். நீங்கள் "வாஞ்சிநாதன்" திரைப்படத்திற்கு பின்பு ஏன் திரைப்படங்களில் நடிக்கவில்லை? என்ற கேள்விக்கு அஞ்சு அரவிந் கூறியதாவது "எனக்கு வாய்ப்பு வரவில்லை என்றும் திருமணத்திற்கு பின்பு நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக சர்ச்சை பரவிதாக கூறியதுடன் நான் தற்போது வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக உள்ளதாகவும்" கூறியிருந்தார். திருமணம் பற்றி கூறும் போது "முதலில் திருமணமாகி விவாகரத்து பெற்று விட்டதாகவும் இரண்டாது தடவை திருமணமாகி கணவர் இறந்து விட்டதாகவும் தற்போது 5 வருடமாக லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும்" கூறியிருந்தார் .
தற்போது நடன வகுப்பு நடத்தி வருவதாகவும் , அங்கு வரும் குழந்தைகள் உங்களை படத்தில் பார்த்தோம் என்று கூறுவார்கள். மேலும் தனது கணவரை பார்த்துத்தான் நடன வகுப்பு ஆரம்பிப்பதற்கு ஆசைப்பட்டதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் குழந்தை பற்றிக் கூறும் போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வதந்திகளை பார்த்து விட்டு நகைச்சுவையாக அம்மா உங்களுக்கு மூன்று குழந்தைகளா நான் நான்காவதா என்றும் மற்றைய குழந்தைகள் எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதாக கூறியிருந்தார்.
மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் அஞ்சு அரவிந்திடம் தனியாளாக குழந்தையை எப்படி வளர்த்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அதாவது "அவர்களுக்கு சொல்லி புரிய வைத்தேன் , நான் அந்த காலத்து பெண்ணுமாதிரித்தான் இப்போதும்" என்று கூறினார். இந்த காலத்து "குழந்தைகளுக்கு அடிப்பது கிடையாது ஆனால் நான் அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தாகவும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியதாகவும்" கூறினார் . மேலும் "வெற்றி தோல்விகளை தைரியமா கையாளவேண்டும் எனக் சொல்லி கொடுத்ததாகவும்" கூறினார்.
மேலும் தனது நடன வகுப்பிற்கு தனியாக சென்றுதான் கற்று கொடுப்பதாகவும் ,மலையாள முன்னணி நடிகர்களுடன் நடித்திருப்பதாகவும் அவர்களுக்கு நான் நினைவில் இல்லை என்பதையும் குறிப்பட்டிருந்தார். தனது மகளுக்கு தளபதி விஜயை ரொம்ப பிடிப்பதாகவும் சந்திக்க நினைத்து முடியாமல் போனதாகவும் தற்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நேர்காணல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!