• May 31 2025

தக் லைஃப் தடைக்குப் பதிலடி; ஒரு நொடியும் feel பண்ணமாட்டார்.! அந்தணனின் அதிரடிப் பகிர்வு.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் சமீபகாலமாக பரபரப்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன், இப்படம் தொடர்பாக நடந்த பிரமாண்ட விழாவில், "தமிழிலிருந்து தான் கன்னடம் பிரிந்தது" எனக் கூறியதன் பிறகு, கன்னட ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்வினைகள் எழுந்தன.


இந்நிலையில், சமூக ஊடகத்தின் விமர்சகரான அந்தணன், இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வகையில் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் கமலின் கருத்தைச் சிதைக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது என்றும், கமல் எப்போதும் தனது கருத்தில் உறுதியாக இருப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தணன் தனது வீடியோவில் கூறியதாவது, “தக் லைஃப் படம் தொடர்பான புரொமோஷன் விழா ஒன்றில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் கலந்து கொண்டிருந்தார். கமலும் சிவராஜ்குமாரும் நீண்டகால நண்பர்கள். இருவருக்கும் இடையில் உள்ள அன்பையும், உள்ளார்ந்த மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக தான் கமல், ‘நாங்கள் இருவரும் வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் அன்பான சகோதரர்கள். அதேபோல, தமிழிலிருந்து பிரிந்து போனது தான் கன்னடம்’.” என்றார்.


அந்தணன், கமலின் கருத்துக்கு எதிராக கிளம்பிய பாகுபாடான விமர்சனங்கள் குறித்தும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். “இது ஒரு மொழிப் பிரச்சனை அல்ல, இது ஒரு அன்பு, ஒற்றுமை பேசும் உரை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கமலுக்கு எந்த மொழியையும், எந்த மாநிலத்தையும் இழிவாக பேச வேண்டும் என்ற நோக்கம் ஒருபோதும் கிடையாது. அவர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர். அவருக்கு எப்படி பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பதற்கான ஞானமும் அனுபவமும் உண்டு.” எனவும் தெரிவித்திருந்தார்.

கமலின் உரைக்கு பின்னர், கர்நாடக மாநிலத்திலிருந்து சில அமைப்புகள் மற்றும் குழுக்கள், தக் லைஃப் படத்தை கன்னட மாநிலத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டாம் எனும் கோரிக்கையுடன் வீடியோ வெளியிட்டிருந்தனர். சிலர் "மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் படம் வெளியிட அனுமதிக்க கூடாது" எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலைமை குறித்து அந்தணன் கூறும்போது, “கமல் எப்பவுமே மன்னிப்பு கேட்பவர் அல்ல. அவர் ஒரு விஷயத்தைப் பேசும்போது, அதற்கு அடிப்படை ஆதாரங்கள் இருந்தால்தான் பேசுவார். ‘படம் வெளியிடாதீர்கள்’ என தடை ஏற்பட்டால் கூட அவர் மனதில் எவ்வித வேதனையும் கொள்ளமாட்டார். ‘நடப்பது நடக்கட்டும்’ என்பது தான் அவர் எண்ணம்.’" என்றார். இந்த வீடியோ தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement