தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்போது இவருக்கு சொந்தமான ஹோட்டல்களில் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர், கொட்டிவாக்கம், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் சோதனைகளில் நடைபெற்று வருகின்றனர்.
இவர் நடிப்பதைத் தாண்டி பல தொழில்களை செய்து வருகின்றார். இந்த நிலையில் ரியல் எஸ்டேட், உணவகம் போன்ற தொழில்களில் ஈடுபட தொடங்கிய இவர் கடந்த ஆண்டுகளாகவே நடிப்பை விடவும் தொழிலில் அதிக ஆர்வம் செலுத்தி நல்ல இலாபத்தினையும் பெற்றார் .
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் இருந்ததாகவும் நடிகர் ஆர்யா மீது புகார் வந்துள்ளதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கொச்சியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனையை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
மேலும் அண்ணா நகரில் உள்ள கிளையும் மட்டும் 3 வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டு வருவதாகவும் . சில உணவகங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், செக்யூரிட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!