• May 17 2024

போலி ஆவணங்களை சமர்ப்பித்த தனுஷ்..? அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் மேல் முன்னர் ஒருமுறை குற்றப்பத்திரிக்கை ஒன்று பதிவாகி இருந்தது. எனினும் அந்த வழக்கினைப் பின்னர் தள்ளுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் இவர் மேல் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்திருந்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தினுடைய உத்தரவினை ரத்து செய்யுமாறு கோரி தற்போது மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


அந்தவகையில் மேலூர் கதிரேசன் தரப்பிலிருந்தே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அதில் "கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர்  5-ஆம் தேதி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக நான் அளித்த புகாரின் அடிப்படையில் முறையாக அதனை விசாரித்து இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் மதுரை நீதிமன்றத்துறை நடுவாரோ வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றமானது தனுஷ் கஸ்தூரிராஜாவின் உடைய மகன் என முடிவிற்கு வரவில்லை. இதனால் தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு நீதிமன்றம் அதனை மதுரை மாநகராட்சிக்கு அனுப்பியது. 


ஆனால் அதன் முடிவுகள் இதுவரை காலமும் வழங்கப்படாத நிலையில் அதனைக் கருத்தில் கொள்ளாது நீதித்துறை நடுவர் வழக்கைத் திடீரென தள்ளுபடி செய்தமை ஏற்க கூடிய ஒரு விடயமல்ல. 

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்களும் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது. எனவே தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பது தொடர்பான வழக்கை  மீண்டும் முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


இந்த வழக்கானது நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அந்த வழக்கில் நீதிபதி, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கை மீண்டும் ஒத்தி வைத்தார்.

Advertisement

Advertisement