• May 17 2024

நடிகர் விஜய் மீது அவதூறு பரப்பப்படுவது ஏன்? உண்மைகளை உடைக்கும் பயில்வான் ரங்கநாதன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவரது நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதேபோல் வசூலையும் குவித்து வருகிறது வாரிசு திரைப்படம். இவ்வாறுஇருக்கையில் சமீப நாட்களாக நடிகர் விஜய் குறித்து அவதூறு செய்திகள் கசிந்த வண்ணமே உள்ளது.

எனினும் குறிப்பாக நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு காரணம் நடிகர் விஜய்க்கு பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுடன் ஏற்பட்ட நெருக்கம்தான் காரணம் என கூறி வருகின்றனர்.அத்தோடு  விஜய் சங்கீதா விவாகரத்து தகவல் வெறும் வதந்தி என விஜய் தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் சமூக வலைதளங்களில் அதை வைத்து வாய்க்கு வந்தப்படி கூறி வருகின்றனர்.



​ இவ்வாறுஇருக்கையில் விஜய் குறித்து அவதூறு செய்திகள் பரப்பப்படுவது ஏன்? யார் இந்த அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என்பது குறித்து வீடியோவில் கூறியுள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். அதாவது விஜய்யை மருத்துவராக பார்க்க ஆசைப்பட்டார் அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர். ஆனால் விஜய் நடிக்க ஆசைப்பட்டதால், அவரது ஆசைக்காக அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அத்தோடு தனது சொத்தை அடமானம் வைத்து மகன் விஜய்யை ஹீரோவாக்கினார் எஸ்ஏ சந்திரசேகர். ஆனால் அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அந்த அளவுக்கு பெயர் பெற்று தரவில்லை. காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் தான் விஜய் தரமான ஹீரோவாக அறியப்பட்டார். அதன்பின்னர் தான் ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார். எஸ்ஏசியின் மகன் என்று சொல்லும் நிலை மாறி இவர்தான் விஜய்யின் அப்பா என்று கூறும் அளவுக்கு விஜய் உயர்ந்ததை பார்த்து சந்தோஷப்பட்டார் எஸ்ஏசி.



எஸ்ஏசி தான் விஜய்யின் ரசிகர் மன்றம், கல்யாண மண்டபம் மற்றம் சினிமா ஆகியவற்றை பார்த்துக் கொண்டார்.புஸ்ஸி ஆனந்த் ரசிகர் மன்றத்துக்குள் பிறகுதான் விஜய் தனது அப்பா, எஸ்ஏ சந்திரசேகரை ஒதுக்கினார். பணிகளை பார்க்க வேண்டாம் என்று கூறி அவரது தலையில் இடியை இறக்கிறனார் விஜய். தொடர்ந்து எஸ்ஏசி தனது மகனை அரசியலுக்கு அழைத்து வர முயற்சி செய்தார், ஆனால் விஜய் கொஞ்சம் காலம் ஆகட்டும் என்றார். இதானல் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.


இவ்வாறுஇருக்கையில் தற்போது விஜய் குறித்து அவதூறு கருத்துகள் வெளியாகி வருகிறது. விஜய் குறித்து இந்த அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள் வாரிசு படத்தின் எதிர்பாளர்கள் தான். அவர்கள் தான் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என கிளப்பி விட்டு வருகிறார்கள். அவருக்கும் குடும்பம் உள்ளது, ஆகையால் இதுபோன்ற அவதூறு செய்திகளை போடாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


Advertisement

Advertisement