• May 17 2024

நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றி போட்டு உடைத்த இயக்குநர்... இது என்ன கொடுமை...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளியான படையப்பா திரைப்படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இன்னும் சொன்னால் படையப்பா திரைப்படம் இவருடைய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம்.


அந்த அளவுக்கு இந்த படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். படையப்பா திரைப்படம் தான் முதன்முதலாக ரம்யா கிருஷ்ணன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த திரைப்படம்.


ஆனால் இதற்கு முன்பே ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நடித்துக்கொண்டிருக்கிறார். எதேர்ச்சையாக அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவரிடம் சென்று எண்ணானது எதற்காக அழுகிறாய் என்று கேட்டிருக்கிறார்.


அதற்கு ரம்யா கிருஷ்ணன் என்னுடைய முட்டிக்கு மேல் இந்த ஆடை இருக்கிறது. இதனை அணிந்து கொண்டு என்னால் எப்படி நடிக்க முடியும். இத்தனை பேர் முன்னால் எப்படி இந்த ஆடை அணிந்து கொண்டு நடிப்பது என்று அழுதிருக்கிறார்.


இதனை கேட்ட கே.எஸ்.ரவிக்குமார் சினிமாவில் இதெல்லாம் சகஜம் இப்படி எல்லாம் டிரஸ் பண்ணா தான் உனக்கு படத்தில் ஒரு ஸ்கோப் இருக்கும். ரசிகர்களின் கவனம் உன் மீது இருக்கும். அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்கும் சினிமாவில் இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது என்று கூறி அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.


அதனை தொடர்ந்து படையப்பா திரைப்படத்தில் நடித்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் முதல் பாதி முழுதும் முட்டிக்கு மேல் ஏறிய உடை அணிந்து கொண்டு தான் தோன்றுவார் ரம்யா கிருஷ்ணன். ஆனால், இரண்டாம் பாதி முழுக்க புடவை சகிதமாகவே தோன்றுவார். இந்த படத்தில் நடிக்கும் போது இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நான் வழக்கம் போல கவர்ச்சியான உடைய அணிந்து நடிக்கிறேன் என்று அடம் பிடித்து கேட்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.


ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இந்த காட்சிக்கு நீங்கள் கவர்ச்சியான உடை அணியக்கூடாது. புடவை தான் அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு, தான் இயக்கிய பாட்டாளி மற்றும் பஞ்சதந்திரம் என இரண்டு திரைப்படங்களில் நடிகர் ரம்யா கிருஷ்ணனுக்கு படுகிளாமரான ரோல்களை கொடுத்து இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.


ஒரு காலத்தில் முட்டி தெரியும் அளவுக்கு உடை இருக்கிறது அதனால் நான் அணிய மாட்டேன் என்று அடம் பிடித்து அழுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்த சில ஆண்டுகள் கழித்து நான் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிக்கிறேன் என்று கே.எஸ்.ரவிக்குமாரிடமே வந்து கேட்டிருக்கிறார்.


ரம்யா கிருஷ்ணன் குறித்து இந்த விஷயத்தை இணையத்தில் போட்டு உடைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதனை கேட்ட, ரசிகர்கள் என்ன கொடுமையாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement