தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஒரு உணர்ச்சி மிகுந்த பதிவின் மூலம் மீண்டும் ஒரு முறை பேசப்படுகிறார். 'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'ஜாம்பி', 'சில நொடிகளில்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம், யாஷிகா ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு யாஷிகா தனது தோழிகளுடன் சென்றபோது நிகழ்ந்த மோசமான வாகன விபத்தில், அவரது நெருங்கிய தோழி Pav உயிரிழந்தார். அந்தச் சம்பவம் யாஷிகாவிற்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. தன்னை மீண்டும் மீட்டெடுக்க பல சிகிச்சைகள், மன ஆற்றல், துயர சுமைகள் – அனைத்தையும் கடந்து இன்று ஒரு உற்சாகமான பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் கழிந்தபோதும் அந்த துயரம் குறையவில்லை என கூறும் வகையில், யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு ஆழமான பதிவு தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது. அதில், அவர் கூறுகிறார்:
"நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன... ஆனாலும் அந்த வெறுமை இன்னும் அதேபோல் நெஞ்சை புண்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் இங்கு இல்லையென்ற உண்மையை ஏற்றுக்கொள்வது ஒரு போராட்டமாகவே இருக்கிறது. ‘நேரம் ஆறுதல் தரும்’ என்று சொல்வார்கள். ஆனால் உங்களால் இழந்த வலி என்னுள் இன்னும் கடுமையாகவே இருக்கிறது. உங்கள் சிரிப்பு, உங்கள் பீச் காமெடி... எல்லாமே ஒரு கனவு போல ஒலிக்கிறது.
Pav, நான் உங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நேசிக்கிறேன். 10ம் வகுப்பில் உதவியது மாதிரி எளிதான விஷயம் என்றாலும், அது எனக்கான ஒரு முக்கியமான திருப்புமுனை. நீங்கள் என்னைப் பார்த்தது, நான் உங்களை வளர்ந்தது — அந்த பயணத்தை மறக்க முடியவில்லை. இப்போது என்னிடம் உள்ளது நினைவுகள் மட்டுமே...ஒருநாள், எங்காவது சந்திப்போம் என நம்புகிறேன். உங்கள் 'pookie poses', சிரிப்பு... அனைத்தும் என் நெஞ்சில் எப்போதும் இருக்கும். Love you 3000, Pav."
இந்த பதிவு யாஷிகாவின் மனதளவிலான ஆழம், ஒரு நெருங்கிய தோழியை இழந்தவரின் உணர்வுகள், மற்றும் அவரது மறக்க முடியாத நினைவுகள் அனைத்தையும் பிரதிபலிக்கிறது. ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள், அவரது பதிவுக்கு ஆறுதலான பதில்களுடன் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!