தமிழ் சினிமாவை தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய். இவர் தற்போது அரசியலிலும் தடம் பதித்துள்ளார். தயாரிப்பாளர் கே.ராஜன் விஜய் குறித்து பேசிய விடயம் ரசிக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்திருந்த நிலையில் கட்சி வேலைகளில் முழு நேரமாக செய்யப்போவதாக அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் ஜனநாயகமன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தயரிப்பாளர் விஜய் குறித்து பேசிய விடயம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது .அதாவது தமிழை வாழ வைப்போம், ஆள வைப்போம் என பேசும் தலைவர் மாபெரும் விஜய் இவர் தனது படத்தில் ஏன் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் . அதாவது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று கூறியிருந்தார்.
மேலும் அங்குள்ள அரசியல் தலைவரின் பிணாமி ஏன் தமிழ் நாடு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லையா , அவரால் 4 தயாரிப்பாளர்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றர்கள், அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே இப்போது வரைக்கும் வாய்ப்பு கொடுக்க வில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வாரிசு படத்திற்கும் தெலுங்கு தயாரிப்பாளர், இப்போது ஜனநாயகன் படத்திற்கும் கர்நாடக தயாரிப்பாளர் எனக் கூறியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!