• Jun 08 2025

சிம்பு தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அதுக்கு அப்புறம் தான் நயன்தாராவும் குழந்தைகளும்: விக்னேஷ் சிவனின் பதிவு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது கணவர் மற்றும் மகன்கள் உடன் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பாக அவர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது குடும்பத்துடன் ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட் பகுதிக்கு சென்றுள்ள நிலையில் அங்கு தனது மகன்கள் உயிர் மற்றும் உலகுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’12 வருடங்களுக்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்தேன். ’போடா போடி’  படத்தின் படப்பிடிப்பின்போது 1000 ரூபாய் நுழைவு கட்டணம் கொடுத்து டிஸ்னிலேண்ட் சென்றோம், அதன் பிறகு இப்போது தான் மீண்டும் குடும்பத்துடன் வருகிறோம்.  குழந்தைகள் குடும்பத்துடன் இந்த இடத்திற்கு வருவது மிகவும் இனிமையான தருணம், மனதிற்கு திருப்தியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் படமான ’போடா போடி’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒ‘அப்பன் மவனே’ என்ற பாடல் முழுக்க முழுக்க இங்கு தான் படமாக்கப்பட்டது என்பதும்,  அந்த பாடலின் படப்பிடிப்புக்காக தான்  சிம்பு மற்றும் வரலட்சுமி உள்பட விக்னேஷ் சிவன் டிஸ்னிலேண்ட் வருகை தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘போடா போடி’ படத்தில் 


Advertisement

Advertisement