தமிழ் சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ‘சரவணன் மீனாட்சி’, ‘இது சொல்ல மறந்த கதை’ போன்ற பல ஹிட் சீரியல்களில் கதை நாயகியாக இருந்து புகழ் பெற்றவர்.
இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளன. ஸ்டைலிஷ் லுக்குடன் மெகா சீரியல் நாயகியாக இல்லாமல் மாடல் லுக்கில் மின்னும் ரச்சிதாவின் இந்த புதிய அவதாரம் பலரையும் கவர்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் சீரியல் நடிகைகள் தங்களது ஸ்டைல் மற்றும் அழகை பகிர்வது தற்போது வழமையாக இருப்பதால் ரச்சிதாவும் அந்த வரிசையில் இணையத்தை ஆட்சி செய்து வருகிறார். இவரது இந்த ஹார்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அழகிய புகைப்படங்கள் இதோ..
Listen News!