• Jun 28 2025

சூர்யாவின் இன்னொரு படமும் டிராப்.. ரூ.350 கோடி பட்ஜெட் படத்திற்கு என்ன ஆச்சு?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஏற்கனவே சூர்யா நடிக்க இருந்த சில படங்கள் டிராப் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்ட சூர்யா படம் ஒன்று டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ’வணங்கான்’ திரைப்படம் திடீரென பிரச்சனைக்கு உள்ளாகிய நிலையில் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதும் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

அதேபோல் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த ’புறநானூறு’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் திடீரென அந்த படமும் ட்ராப் என்று கூறப்பட்டது.



மேலும் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிலையில் தற்போது வரை அந்த படம் உருவாகுமா? அல்லது ட்ராப்பா? என்ற தெரியாத நிலையே உள்ளது.

இந்த நிலையில் பாலிவுட்டில் சூர்யா நடிக்கும் ’கர்ணா’ என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது என்பதும் கர்ணன் கேரக்டரில் சூர்யா மற்றும் திரௌபதி கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்க இருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிக்கு மட்டும் இதுவரை 15 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படமும் ட்ராப் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவின் படங்கள் வரிசையாக ட்ராப்பாகி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் அதேபோல் தற்போது உருவாகி வரும் ’சூர்யா 44’ படமும் விரைவில் வெளியாக இருப்பதால் சூர்யா ரசிகர்கள் இந்த இரண்டு படங்களின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement