• Apr 17 2026

போர்களும் வன்முறையும் எப்போது முடியும்? மனமுருகிப் பேசிய பாடகர் ஸ்ரீனிவாஸ்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகரான ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மனித சமூகம் எதிர்கொள்ளும் வன்முறை, போர்கள் மற்றும் அதிகார ஆசை குறித்து அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்துக்கள் பலரையும் சிந்திக்க வைத்திருக்கின்றன.


“கடவுள் நேரில் வந்து வன்முறையையும் போர்களையும் நிறுத்தச் சொல்ல வேண்டும். அதோடு மனிதர்களிடம் இருக்கும் அதிகார வெறியையும் முட்டாள்தனத்தையும் நீக்க அவர்களுக்கு ஒரு ‘Software Update’ செய்ய வேண்டும்.” என்று அவர் கூறியிருப்பது வைரலாகி வருகிறது. இதன் மூலம் மனிதர்களின் மனநிலையை மாற்ற வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய உலகில் தொடர்ந்து நடைபெறும் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் சமூக வன்முறைகள் மனிதகுலத்தின் அமைதியை பாதித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஸ்ரீனிவாஸ் கூறிய இந்த கருத்து ஒரு ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 

ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் பலரும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் இதன் பின்னணி கருத்தை பாராட்டியும் வருகின்றனர். 

Advertisement

Advertisement