• Jun 14 2026

ராணுவ வீரர்களுக்காக ரூ.1.10 கோடியை நன்கொடையாக வழங்கிய நடிகை..! யாருன்னு பாருங்களேன்..

shali / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரையும் அஞ்சாமல் அர்ப்பணிக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை உலகமே அறிந்துள்ளது. எனினும், அவர்கள் பின்னால் நின்று வாழ்வின் ஒவ்வொரு சவால்களையும் தாங்கும் வீரர்களின் மனைவிகள் குறித்த கவனம் பெரிதாக பேசப்படுவதில்லை.


இந்நிலையில், நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா, இந்திய ராணுவ வீரர்களின் குடும்ப நலனுக்காக ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது தற்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வு "ஆபரேஷன் சிந்தூர்" எனப்படும் ராணுவ நடவடிக்கையின் பின் நடந்துள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த முக்கிய ராணுவ ஒத்திகை நடவடிக்கையால், நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் ஒரு வலிமை கிடைத்துள்ளது.


அதனைத் தொடர்ந்து, வீரர்களின் குடும்ப நலத்திற்காக செயல்படும் இராணுவ வீரர்களின் மனைவிகளுக்காக பிரீத்தி ஜிந்தா வழங்கிய நன்கொடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரீத்தி ஜிந்தாவின் இந்த செயலைப் பார்த்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும்  பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement