தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜேஷ். இவர் குணநட்சத்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் கலந்து மனம் திறந்து பேசிய விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. நேர்காணலில் தொகுப்பளரால் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது நிகழ்ச்சி தொகுப்பாளர் சினிமாத்துறையில் எந்தவெரு தீய பழக்கங்களும்,சர்ச்சையும் உங்களுக்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்ததுள்ளார்.எனக்கு பயம் தான் காரணம் "குடித்தால் உடலில் இருக்கும் ஒவ்வெரு உறுப்பும் செயலிழந்து விடும், பெண்களுடன் பழகினால் உடலில் வேறு நோய் வந்துவிடும்" என்று கூறினார்.
மேலும் நீங்கள் நடித்து கொண்டிருக்கும் போது ரியல் ஸ்டேட் பிசினஸ் செய்தீர்கள் என்ற கேள்விக்கு "காலத்தின் கட்டயம் தான் எனக்கு ரியல் ஸ்டேட் என்றால் என்னவென்று தெரியாது, எனக்கு பிடிக்காத பிசினஸ் ஆனால் அதைத்தான் பிசினஷாகா செய்தேன் என்று கூறினார். மேலும் கமல் சேர் சொன்னார் அருமையாக நடிச்சீட்டு இருக்கீங்க ஏன் பிசினஸ் செய்ய போறிங்க, ஒரு நல்ல நடிகனை திரையுலகம் இழக்கின்றது என்றும் டைரகராக,நடிகராக மரணமடைவதை பணக்கார ராஜேஷாக மரணமடைவதையே நான் விரும்புகிறேன் எனக் கூறினார்.
மேலும் பெரிய பணக்காரனாக வேண்டும், பெரிய பதவி அடைய வேண்டும் ,பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை எனக்கு கமாவாகவும்,முற்று புள்ளி வைத்தது யாரென்றால் மக்கள் திலகம் எம் ஜி ஆர் தான் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் உங்கட வீட்டில் படிக்க வைத்தாங்க பச்சையப்பான் காலேஜ்ல சேர்ந்துவிட்டு இடைநிறுத்தி விட்டிங்க என்ற கேள்விக்கு எம் ஜிஆர் சொல்லுவார் நீ இப்படி படம் பார்த்தின எங்க நீ படிக்க போறாய் அதற்கு பிறகு படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது ஆனால் படித்திருக்கின்றேன் படம் பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கூறுகையில் தனது மனைவி இறந்தபிறகு நிறைய துன்பம் அனுபவித்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார். கணவன் மனைவி உறவு என்பது எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு "தெய்வீகமானது ,ஆத்மார்த்தமானது , நட்பு,அன்பு ,உறவு ,இவைகள் எல்லாம் சேர்த்தது அமைந்த உருவம் தான் மனைவி அவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து பயணிக்கும் வாழ்க்கைதான் புனிதமான வாழ்க்கை அதனை விட்டு விட்டு அவர்கள் நினைத்தது போன்று வாழ்ந்தால் பிரச்சனைதான் வரும் எனக் குறிப்பிட்டுள்ளார் .
Listen News!