• Aug 08 2025

நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா..? விசாரணை தீவிரம்...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா தற்போது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.


முன்னதாக நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா பெயரும் இதில் முன்னிலை பெற்றது. பொலிஸாரின் விசாரணையின் போது கிருஷ்ணா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சில மருத்துவ காரணங்களை முன்வைத்திருந்தாலும் தற்போது சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Advertisement

Advertisement