• Apr 17 2026

ரம்ஜானுக்கு பிறகு அழையுங்கள் வருகிறேன்! கால அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் கெஞ்சும் இயக்குநர் அமீர் !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாலாவின் துணை இணயக்குநராக சினிமாக்கு அறிமுகமானவர் அமீர் ஆவார். இவரது முதல் படமான சூர்யா நடித்த "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் நடிகராகவும் வலம் வருகின்றார். இவ்வாறு இருக்கையிலேயே தற்போது விவகாரம் ஒன்றில் சிக்கியுள்ளார்.


சமீபத்தில் இந்தியாவில் 2000 கோடிரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. குறித்த வழக்கில் முக்கியகுற்றாவாளியாக இருந்தவர் தி .மு .க இன் முக்கிய நிர்வாகியும் , தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் தற்போது கைது செய்யப்பட்டார். இவர் இயக்குனர் அமீரின் நெருங்கிய நண்பர் என்பதனால் அமீருக்கு சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மத்திய தடுப்பு பிரிவினால் விசாரிக்க பட்டும் வந்தது.

குறித்த வழக்கில் முக்கியகுற்றாவாளியாக இருந்தவர் தி .மு .க இன் முக்கிய நிர்வாகியும் ,  தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் தற்போது கைது செய்யப்பட்டார். இவர் இயக்குனர் அமீரின் நெருங்கிய நண்பர் என்பதனால் அமீருக்கு சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு விசாரிக்க பட்டும் வந்தது.



இந்த நிலையிலேயே  வருகின்ற ஏப்ரல் 2 ஆம் திகதி விசாரணைக்காக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அமீர் கால அவகாசம் தருமாறு கோரி கடிதம் அனுப்பி உள்ளார். அதாவது ரம்ஜானுக்கு பிறகு என்னை ஆஜராகும்படி அழையுங்கள் என மின்னஞ்சல் மூலம் மத்திய  தடுப்பு பிரிவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Advertisement

Advertisement