தமிழ் சினிமாவில் சமூக உணர்வுகளைக் கூர்மையாகத் தொடும் கதைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், நடிகர் சசிகுமார் மற்றும் சமூக நுணுக்கங்களை வலுவாக பேசும் இயக்குநர் ராஜு முருகன் முதன்முறையாகக் கைகோர்த்துள்ள திரைப்படம் தான் " மை லார்ட்". இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்த கூட்டணி சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய ‘மை லார்ட்’, சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை நேரடியாகவும் நுட்பமாகவும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது. கிராமிய பின்னணியில் மனித உறவுகள், நீதிக்கான போராட்டம் மற்றும் சமூக அமைப்பின் மறுபக்கங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது என கூறப்படுகிறது.
இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து கன்னட நடிகை சைத்ரா ஜே. ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக முதல் நாள் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்குகளில் நேற்று வெளியான ‘மை லார்ட்’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.35 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியான போதிலும், இப்படம் பெற்றிருக்கும் இந்த வசூல் திரைப்பட வட்டாரத்தில் நல்ல தொடக்கமாகக் கருதப்படுகிறது.
Listen News!