தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. இவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் கடைசி மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்ட பதிவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது .
தற்போது பராசக்தி ,மதராஸி ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் . ஆரம்பத்தில் பல துணை வேடங்களில் நடித்து வந்துள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன் படுத்தி முன்னேறி கொண்டிருக்கின்றார் . இவரது வளர்ச்சியை பார்த்து திரைத்துறையினரே ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளார்கள் என்று கூறமுடியும்.
தற்போது இவருக்கு ஆராதனா,குகன்,பவன் என மூன்று குழந்தைகள் இருக்கின்றார்கள். இன்று பவனுக்கு முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார் .அதாவது "எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துகள்.. Happy first birthday dear Pavan kutty" எனத் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!