• Sep 01 2025

திரைப்படத் தயாரிப்பில் இருந்து விலகிய இயக்குநர் வெற்றிமாறன்...!காரணம் என்னதெரியுமா?

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் வெற்றிமாறன், திரைப்படத் தயாரிப்பு பணிகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட சில நிலைமைகள் இந்த முடிவுக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்த 'மனுஷி' திரைப்படம் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கியிருக்கிறது. சமூக பிரச்சனைகளை வலியுறுத்தும் இந்த படம், வெளிவருவதற்கு முன்பே வழக்கறிஞர்கள் மற்றும் சில சமூகக் குழுக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பட வெளியீடு தாமதமாகி உள்ளது.


மேலும், 'Bad Girl' எனும் மற்றொரு திரைப்படம் மூன்று முறை சென்சார் வாரியத்திற்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகக் கருத்துக்களைப் பதிவு செய்யும் திரைப்படங்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் வரும் சூழலில், தனது படைப்புத் துறையில் முழுமையாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெற்றிமாறன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

"படங்கள் வெளிவருவதற்குள் சர்ச்சைகள் உருவாகி, படத்தின் உரிமை, கலை சுதந்திரம் ஆகியவை கேள்விக்குள்ளாகின்றன. இந்நிலையில், நேர்மையாக படைப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்பதால், படத் தயாரிப்பில் இருந்து விலகுகிறேன்," என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் இந்த அறிவிப்பை வருத்தத்துடன் ஏற்றுள்ளனர். எதிர்காலத்தில் அவர் மீண்டும் திரையுலகிற்கு திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement