• Jun 30 2025

"மார்கன்" படத்தை பாராட்டிய இயக்குநர் சுசீந்திரன்...!நெகிழ்ச்சியில் படக்குழு...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் கிரைம் திரில்லர் கதைகள் சமீபகாலமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அந்த வரிசையில், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அதனை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் உயிரூட்டும் நடிகர் விஜய் ஆண்டனி, தற்போது "மார்கன்"என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்துள்ளார். இந்தப் படம், அதிரடியான திரைக்கதை, ஆழமான கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான பின்னணியுடன் தற்போது ரசிகர்களிடையே பேசப்படும் படமாக உள்ளது.


படம் வெளியான சில நாட்களுக்குள் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் அழுத்தமான திரைப்புதுமைகளுக்கு வழிவகுக்கும் இயக்குநர்களில் ஒருவர் சுசீந்திரன். இவரது விமர்சனங்கள் எப்போதும் நேர்மையானவையாக காணப்படுகின்றனர். சமீபத்தில் "மார்கன்" படத்தை பார்த்த இயக்குநர் சுசீந்திரன், தனது சமூக வலைதள பக்கங்களில், இந்தப் படத்தை நேர்மையான பாராட்டுகளுடன் பகிர்ந்துள்ளார்.


அதாவது  கூறியதாவது “மார்கன் படம் மிகவும் நல்ல முயற்சி. கிரைம் திரில்லராக இருந்தாலும், இதன் உட்சாரம் மனதில் நம்மை தொட்டுப் போகும். விஜய் ஆண்டனியின் மெதுவான, ஆனால் சக்திவாய்ந்த நடிப்பு மிகவும் பாராட்டதக்கது. இயக்குநர் லியோ ஜான் பால் சினிமாவை ஒரு வாசலில் கொண்டுபோகிறார். இவரது காட்சி அமைப்பு, கதையை வடிவமைத்த விதம், மிகவும் நேர்த்தியானது.” இருப்பதாக கூறியுள்ளார் . 


மார்கன் ஒரு சாதாரண கிரைம் திரில்லராக இல்லாமல், மனதைத் தொட்டுச் செல்லும் ஒரு பக்கவாதியைக் கொண்டுள்ளது. சினிமா என்பது உணர்வுகளையும், உண்மையையும் கொண்டு செல்வதற்கான ஊடகம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பாக இந்த படம் அமைந்துள்ளது. இயக்குநர் சுசீந்திரனின் பாராட்டும், ரசிகர்களின் வரவேற்பும், விஜய் ஆண்டனியின் இந்த முயற்சிக்கு புதிய உயரங்களை வழங்கும் என நம்பலாம்.


Advertisement

Advertisement