• May 17 2024

என்னுடைய அடுத்த படத்தில் ஆல்யா பட் தான் ஹீரோயின்- சுவாரஸியமான தகவலைக் கூறிய சிவகார்த்திகேயன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து உச்சம் தொட்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் இவருடன் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி ,தொகுப்பாளர் விஜய், ராஜு எனப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

மேலும் சமீபகாலமாக அனைத்து ஹீரோக்களும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் எப்போது பான் இந்தியா படத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் சிவகார்த்திகேயனிடம் கேட்டனர். அதற்கு பதில் கூறிய அவர் அயலான் படத்தை பான் இந்தியா திரைப்படமாக தான் வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

ஒருவேளை என்னை வைத்து இன்னொரு பான் இந்தியா திரைப்படம் உருவானால் அந்த படத்தில் இயக்குநர் ரவிக்குமார், ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஆலியா பட் ஆகிய மூவரையும் என்றும் நான் செலக்ட் செய்வேன் என்றும் ஹீரோ நான்தான் என்று கூறியுள்ளார்.

இதனால் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அனேகமாக பான் இந்தியா படமாகத்தான் இருக்கும் என்றும் அப்போது அவர் ஆலியா பட்டை அணுகுவார் என்றும் கூறப்படுகிறது

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement