• May 16 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ராதிகா விலகுகின்றாரா?- கோபியைத் தொடர்ந்து அவர் கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. மேலும் பாக்கியாவை விட்டிட்டு ராதிகாவை ஏன் இரண்டாவதாக திருமணம் செய்தேன் என கோபி கடும் ஏக்கத்தில் இருக்கின்றார்.

அத்தோடு கோபியின் குடும்பத்தினருடன் அடிக்கடி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றார் ராதிகா. அத்தோடு ராதிகா பாக்கியா இருவருடனும் ஒரே வீட்டில் இருக்கும் கோபி இனிமேல் என்ன என்ன பிரச்சினைகளை எதிர் கொள்ளப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் கோபி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் சீரியலில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிதது நடித்து வருகின்றார்.


இப்படியான நிலையில் இதில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த செடூலில் நான் இருப்பனே தெரியாது. சீரியலில் இருந்துகோபியை துாக்கினால் என்னையும் சேர்த்து தான் நீக்குவாங்க என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement