• Jun 06 2025

நாஞ்சில் விஜயனின் மகளுக்கு பெயர் சூட்டிய மாமேதை..! யார் தெரியுமா.? வைரலாகும் தகவல்கள்..

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் பலரது மனங்களை வெல்லும் வாசகங்களைப் பகிர்ந்து வருபவர் நாஞ்சில் விஜயன். அவரது எழுத்துக்கள், வீடியோக்கள், உரைகள் என்பன வைரலாகிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தில் மகிழ்ச்சி மிகுந்த ஒரு சிறப்பான தருணம் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. அவரது புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன், அதில் இந்திய அரசியலரங்கத்தின் மிக முக்கியமான பெண்மணி ஒருவர் பங்கேற்றிருப்பது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய திருமதி தமிழிசை சவுந்தராஜன் அவர்களே, நாஞ்சில் விஜயனின் மகளுக்கு பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். 


அதன்போது, “வெளிப்புறத் தோற்றத்தை வைத்து எவ்வளவு விமர்சனங்கள் வந்த போதும் அதையெல்லாம் கடந்து, இரண்டு மாநிலங்களில் ஆளுநராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து, மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்று, இதெல்லாம் தாண்டி இன்று வரை ஒரு வீரப்பெண்மணியாக பல சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி தமிழிசை சவுந்தராஜன் அவர்கள் எனது குழந்தைக்கு பெயர் வைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.


இப்பதிவின் மூலம், தமிழிசை சவுந்தராஜனைப் பற்றி வரும் கருத்துக்கள் சமூகத்தில் எவ்வளவு ஆழம் கொண்டுள்ளன என்பதை நாஞ்சில் விஜயன் நியாயப்படுத்துகின்றார். மேலும், அவரது குழந்தைக்குப் பெயர் என்னவென்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement