கவிஞர் வைரமுத்து நேற்று சென்னை அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. சந்திப்பிற்குப் பிறகு, வைரமுத்து தனது X தளத்தில் ஒரு கவிதைநயமான பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “கலைஞர் திருமகனே! காவல் நாயகனே! வாக்குப்பதிவுக்குப் பின்னை சந்தித்தேன் நேற்று அறிவாலயத்தில் உன்னை உழைப்பின் களைப்பில்லாமல்..” என்று எழுதியுள்ளார். இந்த வரிகள் மூலம், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உழைப்பையும், அரசியல் பொறுப்பையும் பாராட்டியுள்ளார் என ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கலைஞர் திருமகனே!
காவல் நாயகனே!
வாக்குப்பதிவுக்குப் பின்னை
சந்தித்தேன் நேற்று
அறிவாலயத்தில் உன்னை
உழைப்பின் களைப்பில்லாமல்
துடைத்துவைத்த ஆப்பிளாய்த்
துலங்கினாய் நீ
அச்சார வாழ்த்தாய்ப்
பொன்னாடை விரித்துப்
போர்த்தினேன்
“உன்
உழைப்பும் சாதனையும்
உன் கனவை நனவாக்கும்”
என்று உரக்கச்… pic.twitter.com/8D1uNLVwv9
Listen News!