தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே இளைஞர்களை ஈர்க்கும் கதைகளால் ரசிகர்களைக் கவரும் நடிகராக மாறிவருகிறார் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமாகி பின்னர் ‘லவ் டுடே’ மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்ற இவர், அண்மையில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.
2025 திரைக்கு வந்த ‘டிராகன்’ திரைப்படம் தற்போது 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். இந்த வெற்றியை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ளும் விதமாக, படக்குழு தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் முதன்மையாக நடித்துள்ள இப்படம், வெளிவந்ததிலிருந்து இளைய தலைமுறையை வெகுவாக கவர்ந்த படம் என்றே கூறலாம். காதல், தற்காலிக வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் வெற்றி என அனைத்து உணர்வுகளையும் இணைத்த ஒரு விறுவிறுப்பான நவீன சினிமாவாக இது உருவானது.
அத்தகைய படத்தின் 100 நாள் வெற்றி சமூக வலைத்தளங்களில் தற்போது ‘டிராகன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ‘டிராகன்’ திரைப்படம் 2025ம் ஆண்டின் வெற்றி கரமான சினிமாக மட்டுமல்லாமல், இளைஞர்கள் மத்தியில் ஒரு கலாச்சார சின்னம் போலவும் உருவெடுத்துள்ளது. இதுபோன்ற படங்கள் தான் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அடையாளமாக அமைகின்றன எனவும் சிலர் கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.
Listen News!