• Aug 08 2025

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணி குழப்பம்: ‘வடசென்னை’ தொடரின் அடுத்த பாகம் தாமதமா?

luxshi / 2 hours ago

Advertisement

Listen News!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் சிலம்பரசன் என அழைக்கப்படும் சிம்பு தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.


இந்நிலையில் சிம்பு, பிரபல இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற செய்தி வெளியாகியவுடன், அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். 


குறிப்பாக, இது ‘வடசென்னை’ தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் என வந்த தகவல், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த திட்டத்துக்கான ப்ரோமோ ஷூட் ஏற்கனவே முடிவடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், “அறிவிப்பு வெளியாகும் தருவாயில் உள்ளது” என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 


ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த திட்டம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராததால், ரசிகர்களிடையே சந்தேகங்கள் எழத் தொடங்கின.

கோலிவுட் வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, இந்த படம் டிராப் (ரத்து) செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சிம்பு தரப்பே சுட்டிக்காட்டப்படுகிறது. 

ஆரம்பத்தில், படம் வெளியான பின் லாபத்தின் அடிப்படையில் பங்கெடுக்க சிம்பு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் பின்னர், திடீரென ஒரு பெரிய தொகையை சம்பளமாகவே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த மாற்றத்தால், படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடியைத் தாண்டும் நிலையில், தயாரிப்பாளர் கலையப்பன் தாணு இதனை ஏற்க முடியாது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுவே திட்டம் நிறுத்தப்பட்டதற்கான காரணமாக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஆனால், சிம்பு தரப்பு இதை மறுத்து, “படம் டிராப் ஆகவில்லை, புதிய தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று விளக்கம் அளித்துள்ளது. 

தற்போது, சித்தாரா என்டர்டைன்மென்ட் இந்த திட்டத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


எனினும், பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே படம் தொடங்கும்; இல்லையெனில் திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்படும் அபாயம் இருப்பதாக கோடம்பாக்கில் பேசப்படுகிறது.

மொத்தத்தில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சிம்பு–வெற்றிமாறன் கூட்டணி எந்த பாதையில் செல்கிறது என்பதே திரையுலகின் முக்கிய கேள்வியாக உள்ளது.

Advertisement

Advertisement