• Jun 02 2025

ராஜேஷ் Hospital போயிருந்தால் உயிரோடிருந்திருப்பார்..! உண்மையை உடைத்த சீரியல் நடிகை..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

திரை உலகில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகர் ராஜேஷ். சமீபத்தில் அவர் காலமான செய்தி, திரையுலகு மற்றும் அவருடன் பணியாற்றிய பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முன்னாள் சீரியல் நடிகை சர்மிளா பாலாஜி சமூக வலைத்தளங்களில் ஒரு உணர்ச்சி மிகுந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, ராஜேஷ் அவர்களின் வாழ்க்கை, நெருக்கம், நினைவுகள் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


வீடியோவில், சர்மிளா கூறுவதாவது, “நான் அவரை சின்ன வயசில இருந்தே பார்த்திருக்கின்றேன். சன் டீவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடித்தோம். அவர் மிகவும் அன்பானவர். என்னுடைய வீடியோக்கள் சிலவற்றை பாராட்டியிருக்கிறார். இவ்வளவு பெரியவர் என்னை கவனிக்கிறார் என்பது எனக்கு பெருமை!” என்றார். 

சர்மிளா கூறுவதைப் போல, ராஜேஷ் அவர்கள் மிகவும் தெளிவான மற்றும் நம்பிக்கையற்ற தன்மை கொண்டவராக இருந்துள்ளார். வாழ்க்கையில் யாரையும் முழுமையாக நம்பக்கூடாது என்கிற நிலைப்பாடு அவரிடம் இருந்து வந்தது.


சர்மிளா பகிர்ந்த தகவல்களின் படி, நடிகர் ராஜேஷ் தனது உடல்நிலை குறித்த எந்தவொரு விடயத்திலும் மருத்துவமனை செல்லும் முயற்சியை தவிர்த்து வந்தர் எனவும் தெரிவித்திருந்தார். “அவருக்கு வயதான பிறகு சர்க்கரை நோய், நெஞ்சு வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டு வந்தன. ஆனால் அவர் மருத்துவரிடம் செல்ல விரும்பவில்லை. ‘நான் இயற்கை மருத்துவம், சித்தா பக்கம் தான் பாக்குறேன்’ என்று சொல்லுவார்.” மேலும், சர்மிளா அவருக்கு hospital செல்லும் அவசியத்தை வலியுறுத்தியிருந்தாலும், ராஜேஷ் தனது பாரம்பரிய நம்பிக்கையை வைத்திருந்ததாகவும் கூறினார்.


Advertisement

Advertisement